Monday, July 5, 2010

முதலையின் கண்கள்

எல்லைகள்
தவறித் திரியும்
நிலவின் வஞ்சகம்
நீ
சாக்குகளை அவிழ்த்தபோது
சுருட்டி எறிந்துவிட
இயலுமென்ற போதும்
இழைகளைச் சிதைக்கிறேன்
சிதைவின் வழியிறங்கும்
பசிக்காகவேனும் நீ
வேட்டைக்கு கிளம்பலாம்
ஏங்கிக் காத்திருக்கும்
அந்த
முதலையின் கண்கள்

No comments:

Post a Comment