Friday, November 15, 2013

மௌனம்


ஜைனாபதி சீக்கிரமே 

செத்துப் போய்விட்டாள் 

எல்லா  வரிகளும்

விதிக்கப் பட்டுவிட்டது 

ஷாஜஹனால் 

குருட்டு டால்பின்கள் 

தொலைந்த பிறகு 

என்ன செய்யப் போகிறோம் 

எல்லா 

தேடல்களுக்குப் பின்னும் 

நீயாகவே சிந்தினாய் 

உன் 

புன்னகைக்கடியிலிருப்பதை 

உனக்கு யார் சொன்னது 

மௌனம் 

சந்தேகங்களை மட்டுமே 

விதைத்து விடுமென்று