Thursday, July 31, 2014

ஜைனாபதியின் தீண்டலுக்காய்

அடுக்களையிலோ , கதவிடுக்கிலோ

ஒளிந்திருக்கக் கூடுமென

தேடிக்கொண்டிருக்கிறாள்

துக்ளக்கின் சாயமேறிய

ஔரங்கசீபை

துக்ளக்கின் சாயம்

கரைந்து விட்டிருந்தது

எஞ்சியிருக்கும்

காதலென்னும் விஷத்தை

விட்டுச்  சென்றிருந்தான் 

ஔரங்கசீப்

கோப்பை தகித்துக் கொண்டிருந்தது

ஜைனாபதியின் தீண்டலுக்காய்