Friday, January 7, 2011

கிழவனை உறையவைத்த காலம்

நான் , காலம் , கிழவன்
முடிவற்றுப் பிளவுபடும்
முககோணங்களாய்
கிழவனை
உறையவைத்த காலம்
என்னை
கிழிதல்களுக்குட்படுதுகிறது
கிழிதல்களுக்கு பின்
உறைதல சாத்தியமென்றாலும் கூட
இற்றுப் போய்விடும் அச்சம்
வெறி ஏறிக் கொண்டிருக்கிறது
காலத்தின் வினவுதல்
ஒவ்வொரு வீச்சிலும்
என்னிடம் மட்டுமே
கேட்டுக் கொண்டிருக்கிறது