Thursday, July 29, 2010

வெறியாட்டுக்காய்

மௌனத்தின் ஒலியால்
வெளியெங்கும்
நிரப்பப் பட்டிருக்கும்
எலுமிச்சை எழுத்துக்கள்
y ஆல் எரிக்கப்பட்டு
பிரதியெங்கும்
அலைவுறும் கட்டளைகள்
வெறியாட்டுக்காய்

Saturday, July 10, 2010

ஒரே படிக்கட்டில்

நீல நிறத் தென்னைகள்

செழித்திருந்தன

புத்தனும் கண்ணனும்

கிறங்கிக் கிடந்தனர்

கோணல் எழுத்துக்கள்

சுவரெங்கும் துளிர்த்தன

பொங்கல்வரை பூட்டி

வைத்திருக்கலாமெனத்

தோன்றுகிறது

Monday, July 5, 2010

மொழிதல்

வேறுவேறாய் மொழியப்பட்டது
எல்லோரும் ஒன்றையே
பேசியதாய்ச் சொன்னார்கள்
பேச்சின் முடிவில்
வலதிமை
நரம்பு விடைத்தது
ஒரே இரவில்
சாலை எப்படி நீண்டதெனத்
தெரியவில்லை

முதலையின் கண்கள்

எல்லைகள்
தவறித் திரியும்
நிலவின் வஞ்சகம்
நீ
சாக்குகளை அவிழ்த்தபோது
சுருட்டி எறிந்துவிட
இயலுமென்ற போதும்
இழைகளைச் சிதைக்கிறேன்
சிதைவின் வழியிறங்கும்
பசிக்காகவேனும் நீ
வேட்டைக்கு கிளம்பலாம்
ஏங்கிக் காத்திருக்கும்
அந்த
முதலையின் கண்கள்