Tuesday, August 2, 2016

என்
ரோமக்கால்களின் அடியெங்கும்
ஒற்றறிந்திருக்கிறது  அந்தப் பூனை
தில்லைக்காளி நாணவில்லை
நாணை அசைக்கிறாள்
நாணின் அதிர்வால்
நிலத்தில் நடுக்கம்
சிறகை விரித்து  மிதக்கிறது
பூனை
ஒட்டுண்ணி இரட்டைகள்
சுவாசத்தின்  பெருஞ்சத்தத்தில்
ஊனாய்க் கிடந்தன.