Monday, August 2, 2010

அந்த பட்டாம்பூச்சி பயணத்தை முடித்துக்கொண்டது

பூக்கள் முடிவற்றுக்
காத்திருந்த காலமொன்றில்
மிதிவண்டியின் கைப்பிடியிலும்
சீட்டிலும் அமர்ந்து பயணித்தோம்
சில மனிதர்கள் , மரங்கள்
வீடுகள் , வயல்கள்
சாலைகளைத் தாண்டி
ஒரு மதுச் சாலையருகில்
அந்த பட்டாம்பூச்சி
பயணத்தை முடித்துக் கொண்டது

No comments:

Post a Comment