Thursday, June 10, 2010

கேட்கவே கூசுகிறது

எமனைப் புணர்ந்ததாய்ச்
சொல்வது ஈறாக
எல்லா புணர்தல் வசவுகளும்
பழைமையாகிப் போனதால்
வலை குப்பையில்
வசவு தேடினேன்
கி.பி. 2100 வாக்கில்
எல்லா புனர்தல் வசவுகளும்
காலாவதியாகிவிடும் என ஒரு தரவு
தெருச் சண்டைகளில்லாத
புணர்தல் வசவுகள் கேட்காத
தமிழர் ஊர்கள்
கேட்கவே கூசுகிறது

No comments:

Post a Comment