Sunday, August 25, 2019

தர்மசங்கடமான
அந்த மணித்தியாலம்
 சிறு நெருடல் தவிர்த்து மோசமானதாக இருக்கவில்லை
நீ தேவதையாகிப் போனாய்
நான் முட்டாளாகியிருக்க வேண்டும்
ஒரு மலரை உயர்த்தவோ
 தொடர்பை பரிமாறலோ
திராணியற்று பலவீனங்களால் ஆளப்படுபவன் நான்
கோர்வையற்ற உளறல்களுடன்
கோரிக்கை முன்வைப்பு மின்றி
இந்தக் கவிதையின்
 கடைசி வரிகளைப் போல்
முடிவற்றுத் தொடர்கிறேன்

No comments:

Post a Comment